சனி, 15 ஆகஸ்ட், 2009

நாடியில் நாடியது, நாடாதது.

ராமன் என்பவர் நாடி பார்க்கப் போகிறார். நாடி ஜோசியர் ஒரு கூடை நிறைய சுவடி கொண்டு வந்து ஒவ்வொன்றாக பார்த்தவாறு கேள்வி கேட்கிறார்.

உங்கள் பெயர் ராமன். உங்கள் அப்பாவுக்கு சிவன் பெயர்.
"சரி"
உங்களுடன் கூடப்பிறந்தவர்கள் அஞ்சு பேர்.
"இல்லை"
அப்படியானால் இது உங்கள் நாடியல்ல. வேறு ஒரு சுவடியை எடுக்கிறார் ஜோசியர்.
உங்க அம்மா பேரு லட்சுமி தேவி சம்மந்தமானது.
"இல்லை"

அப்படியானால் இது உங்கள் நாடி இல்லை.

இப்படியாக கேள்வி மேல்கேள்வி கேட்டு பதில்களை வந்தவருக்குத தெரியாமலேயே ஜோசியர் கண்டுபிடித்து விடுவார். பின் என்ன. எல்லாவற்றையும் பொருத்தி ஒரு பழைய தமிழ்ப்பாட்டு எழுத வேண்டியதுதான்.

உங்கள் நாடியை நாளை எடுத்து வைக்கிறேன் வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார் ஜோசியர். நாளைக்குள் புதுப் பாட்டு தயார்.

இப்படி நடக்கிறது என்று ஒரு சிலர் கருதுகிறார்கள். இதன் காரணமாகத்தான் இறந்த காலம் சரியாக இருப்பதாகவும் எதிர் கால ஜோசியம் பலிப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். லாட்ஜில் தங்கி இருப்பவரிடம் தகவல்களை அவரறியாமல் கேட்டறிந்து நாடி ஜோசியருக்குச் சொல்வது உண்டு என்றும் சொல்கிறார்கள்.

ஆதரவாக எண்பது சதமும் எதிர்த்து இருபதும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
உண்மை எங்கோ ஒளிந்திருக்கிறது.
Y.raman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!