சனி, 15 ஆகஸ்ட், 2009

ஆவியைப் பார்க்க ஒரு சாவி. ஆவியை சந்திக்க ஒரு பாவி.


ஆவி உலக தொடர்பு இறந்தவருடன் பேசுவது பற்றி எழுத கொஞ்சம் தயக்கத்துடன் தொடங்குகின்றேன்.  இறந்த பெரியவர்களின் சாபம் கிடைக்கக் கூடும் என்ற பயம் காரணம் அல்ல. இங்கே கேள்விப் படுவதில் எதை நம்புவது எதை விடுவது என்று தெரியாமையும் ஒரு காரணம்.

என் உறவினர் ஒருவர் தாம் இது பற்றி நிறைய ஆராய்ச்சி செய்ததாகக் கூறினார். சிக்கல் என்ன வென்றால் அவர் கற்பனை சக்தி மிக்கவர். சுவை படப் பேசவேண்டும் என்ற ஆர்வத்தில் பொய் மெய் என்றெல்லாம் பார்க்க மாட்டார். (இந்த குணம் நம் அனைவரிடமும் ஓரளவு உண்டு) அவர் கூறிய சம்பவங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?

அவரது சகோதரி பூனைக் கண் கொண்டவர். இந்த மாதிரி நபர்களிடம் ஆவிகள் நெருங்கிப் பழகும் என்று ஒரு நம்பிக்கை உலவுகிறது. இந்த சகோதரி அறையின் உள்ளே தனியாக இருந்து கொண்டு கதவை வெறுமே சார்த்திவிட்டு அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்.  வெளிப் பக்கம் பலர் ஒன்று கூடி தள்ளினாலும் கதவைத் திறக்க இயலவில்லை. காரணம் ஆவிகள் அவருடன் சேர்ந்து கதவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தது தான்.

இதை நீங்கள் நம்ப முடிகிறதா? எனக்கும் நம்பிக்கை வரவில்லை. எனினும் அந்த சகோதரி கூட அதை உறுதி செய்த பொது நம்பாமலிருக்கவும் முடியவில்லை.

ஆவிகளிடம் பேச பல வழிகள் இருப்பதாகத் தெரிகிறது. இது விஷயத்தில் உங்கள் அனுபவம் ஏதும் உண்டா? உள்ளீடுகள் வரவேற்கப் படுகின்றன.
yraman

4 கருத்துகள்:

  1. இது ஆவியுலக விஷயமா இல்லையா என்று தெரியவில்லை; எனினும் கூறுகின்றேன்:
    என்னுடைய யாஹூ மெசஞ்சரில் - பத்து வருட கால நண்பர்கள் & உறவினர்கள் மெயில் ஐ.டி.கள் உள்ளன. இருபது நாட்களுக்கு முன், நான் நெட்டிக் கொண்டிருந்த போது,
    மெசஞ்சரில் "dhana" - on line என்று வந்தது. அதைப் பார்த்து நான் புல்லரித்துப் போனேன்.
    ஏன் என்றால் - "தனா" என்று என்னால் அடையாளக் குறியிட்டு மெசஞ்சரில் பதிந்து வைக்கப் பட்டுள்ள என் நண்பன் தனசேகரன் காலமாகி இரண்டு வருங்களுக்கு மேலாகிவிட்டன!
    My chat calls immediately to that user - on that day were not at all answered!!

    பதிலளிநீக்கு
  2. ஆவி வரும்போதும் சரியாக பேச முடியாது.... ஆனால் இது கெட்ட ஆவி இல்லை. கொட்டாவி.

    பதிலளிநீக்கு
  3. indha ullagil kadavulum illai, peikagalum illai.
    kadavul irundhu irundhal mannidharkal yaarum kastapada vendiya oru nillai vaaradhu....
    adhu pondru peikal irundhu irundhal naam anaivarum ullagil irukum nillai varadhu.....



    thanks
    Nivetha prasanth

    பதிலளிநீக்கு
  4. இரு கதவுகளையும் ஒருசேர திறந்தால் சாதாரணமாக திறக்கமுடியாது,தாழ் போடாவிட்டாலும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!