செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

Nadi Josiyam One More Surprise.

இதோ ஒரு புத்தம் புது திகைப்பு. நேற்று என் நண்பர் ஒருவர் தன மகளுக்கு நாடி ஜோதிடம் பார்த்ததாகவும் அதில் அவளது திருமணம் மற்றும் வரப்போகும் மாப்பிள்ளை பெயர் எல்லாம் சரியாக கிடைத்ததாக சொல்கிறார்!!  இவ்வளவுக்கும் அவரது மாப்பிள்ளை பெயர் எதோ சுப்பிரமணியன் வெங்கடராமன் என்பது போல வழக்கமாக காணப்படும் பெயர் அல்ல. அறுபடை வீடுடையான் என்பது மாதிரி கொஞ்சம் அபூர்வமாகக் காணப்படும் பெயர்.

Mystery deepens.
yraman

3 கருத்துகள்:

  1. நங்கநல்லூரில் காமாட்சி ஸ்வாமிகள் என்று ஒருவர் இருக்கிறார்.. அவரும் மக்கள் போய்ப் பார்த்த உடன் அவர்களைக் கூப்பிடும் போதே கையில் அவர்களைப் பற்றி விவரங்கள் எழுதிய ஒரு பேப்பர் தருவாராம். அது எல்லாம் சரியா இருக்குமாம்.
    அதெல்லாம் சரி, நடக்கப் போவது பற்றி சொல்லும்போதுதான் 98% நடப்பதில்லை. நம் வாழ்வில் ஏற்கெனவே நடந்தது நமக்குத் தெரியும். இதற்கு எதற்கு ஒரு ஜோதிடர், அல்லது ஸ்வாமிகள்?! அப்புறம் நடக்கப் போவதை யாருமே சரியாக சொல்வதில்லை...

    பதிலளிநீக்கு
  2. எனக்கு நாடி பார்த்தவர் ஜவர்லால் என்கிற சற்று அசாதாரணமான பெயரை மிகச் சரியாகச் சொன்னார். என் மகனுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து நடந்த ஸ்கூட்டர் விபத்தை முன் கூட்டி சொன்னார்(மகனிவனும் வாகன கவனம்)

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. நாகை ஜவுளி வியாபாரி [பெயர் வேண்டாம்] அவர் சகோதரி குறித்து நாடி ஜோசியம் பார்க்கப்போய் அவரது சகோதரியின் நெற்றியில் ஜனனத்தின் போது மருத்துவர் உபயோகித்த ஆயுதத்தின் வடு இருக்கும் என்பதில் தொடங்கி, இளமையிலேயே கணவனை இழந்து விடுவார் என்பதையும் கேட்ட பின் நாடி ஜோசியர் சொன்னது கேட்டு வேறு தொழில்களும் தொடங்கினார். ஜோசியம் பலித்ததோ இல்லையோ, மிகவும் நேர்மையானவர் என்பதால் அவர் எடுத்துக்கொண்ட எந்த வேலையும் சுலபமாகவே முடிந்தது !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!