வெள்ளி, 4 செப்டம்பர், 2009

இது இப்படிதான்...

மரணம் என்பது கொடிய அரக்கன். எப்படி வரும் எப்போது வரும் என்று தெரியாது....ஒரு மனிதனின் கனவுகளையும் எண்ணங்களையும் 'சட்'டென முறித்துப் போகும் கொடுமையான விஷயம்.
நீண்ட நாள் நோயில் உள்ளவர் தன் மரணத்தை ஓரளவு எதிர்பார்த்திருப்பார். 'ஆஸ்துமா' போல நித்ய கண்டம் பூர்ணாயூசும் உண்டு. ஏதோ cancer வந்தது, வேற வியாதி வந்தது, வாழ்வு இவ்வளவு நாள்தான் என்பது ஒரு வகை.
'சட்'டென ஒரு விபத்தில் துர்மரணம் அடைவது, நடுத்தர வயதுக் காரர்கள், எந்த நோயும் இல்லாதவர்கள் கூட, இரவு படுத்தால் காலை எழவில்லை, ஒரு தம்ளர் தண்ணீர் கேட்டார்கள், போய்விட்டார்கள் என்றோ முடிந்து விடுகின்றது.
100 வருடங்கள் வாழ்வது எப்படி என்று தமிழ்வாணன் புத்தகம் எழுதினர். 54 வயதிலேயே மறைந்தார்.
என்னென்னவோ புத்தகங்களை இந்த வாரம், மாதம் முடித்து விட வேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்கும்.
பிடித்த பாடல்களின் List மனதில் ஓடி இருக்கும் - "Night படுக்கப் போகும்போது இன்றாவது அந்த கண்டசாலா பாட்டுக் கேட்கணும்..."
உற்ற நண்பனை சந்தித்து ரொம்ப நாளாச்சு... தப்பா நினைப்பானோ? இந்த ஞாயிறாவது அவன் வீடு சென்று வர வேண்டும்...
மாடில புதுசா மாத்திக் கட்டின ரூம்ல படுத்து பாட்டு கேட்டுகிட்டே புத்தகம் படிக்கணும்...
எத்தனையோ கனவுகள்...எண்ணங்கள்...திட்டங்கள்...
ஒரு நொடியில் அதனையும் எதிர்பாராமல் முறிக்கப் படும் என்று கண்டோமா என்ன? முறிக்கப் பட்ட இந்த எண்ணங்கள் எங்கே போகும்? ஆன்மா வெளியேறி வேறு லோகம் செல்கிறது. எண்ணங்கள் இங்கேயே psychon களாக அலைகின்றனவா?
ஆக நோய்வாய்ப் பட்டு இறந்தாலும், காரணமில்லாமல் அகால மரணமடைந்தாலும் மரணம் உறுதி. அதை எந்தக் காரணத்துக்குள்ளும் அடைக்க முடியாது.
சிறு வயதில் மரண செய்திகள் கேள்விப் படும்போது திகிலாய் இருக்கும். முதன்முதலாக நமக்கும் மரணம் உண்டு என்று அப்பாவிடம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொண்ட போது இரண்டு நாள் சாப்பிடப் பிடிக்கவில்லை! "கவலைப் படாதடா! ஒண்ணொன்னுக்கா மருந்து கண்டு பிடிச்சிண்டு இருக்கா..நாம பெரியவங்க ஆரதுக்குள்ள இதுக்கும் மருந்து கண்டு பிடிச்சிடுவாங்க..." என்று நண்பர்களுக்குள் தேற்றிக் கொண்டதுண்டு - ஏதோ பெரியவர்கள் ஆனால்தான் இறக்க வேண்டும் என்பது விதி (இது FATE இல்லை... RULE!) மாதிரி.
பெரியவர்கள் எல்லாம் போறாங்க...நமக்கு இன்னும் நாள் இருக்கிறது என்று (முட்டாள்தனமாக) தோன்றும். பிறகு... எப்போ நாமோ என்று தோன்றும்!
மரணம் என்ற இந்த எண்ணங்கள்தான் மனிதனை மரணத்துக்குப் பின் என்ன என்று என்ன வைக்கிறது. ஆர்வம்!
MJ மறையும்போது இல்லாத தாக்கம் ராஜீவ் மறையும்போதோ,YSR மறையும்போதோ வருவதேன்?
குப்பனும் சுப்பனும் தினமும் நிறைய மடிகிறார்கள். பாதிப்பதில்லை. நம் சொந்தத்தில் நடக்கும் போதுதானே அதன் தாக்கம் தெரிகிறது?
அதற்கென்ன செய்ய என்கிறீர்களா?
மரணம் ஒரு சுகமான விடுதலை! பல கஷ்டங்களில் இருந்தும் நம்மை 'சட்'டென விடுவித்து அழைத்து செல்கிறது.
நடு இரவில் சத்தம் கேட்டால் கதவைத் திறக்க பயம். திறந்து விட்டால்.... ஒன்றுமே இல்லை. மூடிய கதவுகளுக்குள் இருந்த பயம் கூட காணாமல் போய் ஒரு சுதந்திர உணர்வு தோன்றும்.
அடுத்த உலகம் பற்றி எல்லாம் நாம் செய்யும் கற்பனைகள்தானே... Proof உண்டா என்ன? உண்மையில் என்ன என்று யாருக்குத் தெரியும்?

3 கருத்துகள்:

  1. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள், சில பேர் போய்ச் சேர்ந்தபின், பல்லாயிரம், பல லட்சம் பேருக்கு ஏற்படும் நிம்மதி,தப்பித்தோமே என்ற சந்தோஷம்,உதாரணமாக, ஹிட்லர், ஸ்டாலின்.....இப்படி வரிசையாக!

    மரணம் என்பது வெறும் அனுபவமோ, விடுதலையோ இல்லை! அது ஒரு கதவு, ஒரு பாதை, அவ்வளவுதான்!

    மரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டாகவேண்டும்! ஏனென்றால், அது நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, மரணத்தின் இன்னொரு பக்கமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.

    எனக்கு தெரிந்த ஒரு புத்தகம் - ஜென் தத்துவ விளக்கக் கதைகள்" எழுதியவர் - சிஎஸ் தேவநாத். மரணத்திற்கு நல்ல விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருந்தன.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மரணத்தைப் பற்றி யார் சொல்ல முடியும், யார் தெரிந்துகொள்ள முடியும்? சென்றவர் சொல்லமுடியாது செல்ல இருப்பவர் அறிவதற்கில்லை.

    மரணம் என்பதை வாழ்வின் கடைசி நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல் உங்களுக்கு நேரும் ஒவ்வொன்றையும் அவ்வப்போதே முடித்து அதற்கு செத்துப் போக முடியுமா என்று ஜெ. கிருஷ்ணமூர்த்தி கேட்கிறார். Can you live without a single image and die to everything when something ends? நாம் இது நமக்கு சாத்தியமல்ல என்று சொல்லிவிடுகிறோம். அவர் சொல்வது, இதை செயல்படுத்தாமல் கேட்ட மாத்திரத்தில் இயலாதென்று ஒதுக்கலாமா என்பதுதான். தட்டு நிறைய பஜ்ஜி இருக்கும்போது ஒன்றை எடுத்து ருசித்து அத்துடன் அந்த அனுபவத்துக்கு செத்துவிட்டவன் அடுத்த பஜ்ஜியை நாட மாட்டானா? தெரியவில்லை. ஆனால் இரண்டாவது மூன்றாவது பஜ்ஜி சாப்பிடுவது வேறு, எனக்கு இன்னும் வேண்டும் வேண்டும் என்று சந்தோஷங்களுக்காக திரிவது வேறு அல்லவா? முதல் பெக் விஸ்கிக்கு அப்புறம் இரண்டாவதை நாடாத மனநிலை எவ்வளவு சிறப்பானதாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!